புதுக்குடியிருப்பில் குட்டைக்குள் விழுந்த வயோதிபர் உயிரிழப்பு
முல்லைத்தீவு (Mullaitivu) புதுக்குடியிருப்பு பரந்தன் வீதி, கைவேலிப்பகுதியில் வயல்நீர் வடிந்தோடும் குட்டை ஒன்றிற்குள் விழுந்து வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (11.04.2024) இடம்பெற்றுள்ளது.
கைவேலி வயல்வெளிப்பகுதியில் காணப்படும் குட்டை ஒன்றுக்கு அருகில் குறித்த முதியவரின் மிதிவண்டி காணப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட உடல்
இதனை அறிந்த வீதியால் சென்றவர்கள், குட்டைக்குள் விழுந்த நிலையில் காணப்பட்ட முதியவரின் உடலை மீட்டுள்ளனர்.
அதனையடுத்து, அவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |