யாழில் மூதாட்டியின் சங்கிலி அறுப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் கைவரிசை
யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் வைத்து மூதாட்டி ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுண் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று(14.07.2026) மாலை யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகிலுள்ள தேவாலயப் பகுதிக்குச் சமீபமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர்..! விரைவில் கைது செய்யப்படவுள்ள பிள்ளையான்
கைது செய்வதற்கான நடவடிக்கை
மேற்படி மூதாட்டி, மற்றுமொருவருடன் மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

திடீரென மூதாட்டியின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துக்கொண்ட அந்த நபர்கள், மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தின் போது, திருட்டில் ஈடுபட்ட இருவரும் அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைக்கும் முகக்கவசங்களை அணிந்திருந்ததாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் முறைப்பாடு பெற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளைக் கொண்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan