அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு! வங்கிகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்
ஜூலை மாதத்திற்கான அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் இன்று(15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலத்திட்ட உதவிகள் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, பயனாளிகளுக்கு சுமார் ரூ. 11.83 பில்லியன் தொகை வழங்கப்பட உள்ளது.
அஸ்வெசும நலத்திட்ட உதவிகள்
இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 1,012,812 பயனாளிக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 9.35 பில்லியனுக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்படும்.

இரண்டாம் கட்டத்தில், மேலும் ரூ. 2.46 பில்லியன் தொகை 211,647 பயனாளிக் குடும்பங்களின் அஸ்வெசும கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் திட்டத்தின் இரண்டு கட்டங்களின் கீழ், மொத்தமாக 1,224,459 பயனாளிக் குடும்பங்கள் இன்று ரூ. 11,825,596,250 தொகையைப் பெறும் என்று நலத்திட்ட உதவிகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri