கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி படுகொலை!
கேகாலை (Kegalle) - திவுல பிரதேசத்தில் கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மூதாட்டி கல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், கேகாலை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த பின்னர் நேற்று (2) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
காணித் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்தோடு, இந்தச் சம்பவம் தொடர்பில் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
