நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாளை மற்றும் நாளை மறுநாள் வழக்கம் போல் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அடுத்த மே மாதம் வரை எரிபொருள் கையிருப்பு தற்போது உள்ளது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமரகே கூறியுள்ளார்.
எரிபொருள் விநியோகம்
இருப்பினும், நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் செய்வதற்காக, எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் செயல்பாட்டிற்கு வசதியாகப் போதுமான கையிருப்பை ஆர்டர் செய்யும் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, எரிபொருள் ஆர்டர் செய்வதில் ஏற்படக்கூடிய தாமதங்களைத் தடுக்கும் வகையில், முந்தைய நாளே ஆர்டர்கள் பிரிவிற்கோ அல்லது கையிருப்பு முனையத்திற்கோ உரிய காசோலைகளை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டுகின்றது.
இருப்பினும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் விநியோகம் ஒரு அத்தியாவசிய சேவையாகத் தொடர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாகனப்பதிவு எண்
இதற்கிடையில், வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் ஒற்றை மற்றும் இரட்டை எண்கள் என்ற அடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது.

இன்று இரட்டை இலக்க நாள் என்பதால், வாகனப் பதிவு எண்ணில் இரட்டை இலக்கம் கொண்ட வாகனங்கள் மட்டுமே எரிபொருளைப் பெற முடியும்.
இருப்பினும், கியூஆர் குறியீட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும், சில வாகன உரிமையாளர்களால் ஒருமுறை கூட எரிபொருளைப் பெற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.