வீசா சர்ச்சை குறித்து ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள விளக்கம்
வீசா சர்ச்சை குறித்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து விளக்கமளிக்க உள்ளனர்.
வெளிநாட்டவர்களுக்கு வீசா வழங்குவது தொடர்பிலான பணிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து தெளிவூட்டப்படவுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்கள தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இவ்வாறு விளக்கமளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
புதிய வீசா முறைமை
புதிய வீசா முறைமையினால் நாட்டின் பாதுகாப்பிற்கும் ராஜதந்திர ரீதியில் எழக்கூடிய பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவூட்டப்படவுள்ளது.
ஜனாதிபதி முதல் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைமைகளுக்கு இந்த நிலைமைகள் தெளிவூட்டப்பட உள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், நாளைய தினம் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார்.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 22 மணி நேரம் முன்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam