நுவரெலியாவில் குடைசாய்ந்த லொறி : நால்வருக்கு காயம்
நுவரெலியாவில் (Nuwara Eliya) தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து ஏற்பட்ட விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த நால்வரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்தில் இருந்து பீட்ரு தேயிலை தொழிற்சாலைக்கு தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்துள்ளது.
முன்னோக்கி சென்ற லொறியில் தடுப்புக்கட்டை (பிரேக்) திடீரென செயழிழந்ததன் காரணமாக பின்னோக்கி வந்து குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
