இலங்கையில் டெல்டா திரிபுகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு! வெளியாகியுள்ள தகவல்
இலங்கையில் டெல்டா வைரஸின் நான்கு வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு உயிரியல் ஆய்வுகள் பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவ்கே இதனை தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து இலத்திரனியல் ஊடகங்களும் ஒன்றிணைந்து ஒளிபரப்பிய விசேட நிகழ்வொன்றில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேராசிரியர் நீலிகா மலவ்கே டெல்டா வைரஸ் வகையின் திரிபுகள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் கண்டறியப்பட்ட 4 வது டெல்டா பிறழ்வு குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியக இயக்குனர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடாவ இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை கூறியுள்ளார்.
தமது அலுவலகத்திற்கு 4 வது பிறழ்வு உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை எனவும், இலங்கையில் கண்டறியப்பட்ட டெல்டா வகையின் மூன்று பிறழ்வுகள் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிந்திருப்பதாக பட்டுவந்துடாவ” கூறியுள்ளார்.