இளைஞர்களை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்திய ஆளும் தரப்பு எம்.பி
இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கும் அமைப்பானது 'ஈஸிகேஸ்' போன்றதா என்று இளைஞர் சமுதாயத்தின் திறமைகளை மழுங்கடிக்கும் விதத்தில் தேசிய மக்கள் சக்தியின் லசித் பாசன எம்.பி நாடாளுமன்றில் உரையாற்றியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எம்.பி கொண்டு வந்த தனிநபர் பேரேரணையை ஆதரித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு
தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்கள் எதிர்பார்க்கும் முறையில் ஒரு சிக்கல் இருக்கிறது.இதை நாங்கள் எங்கிருந்து ஆரம்பிப்பது.முதலாம் வகுப்பிலா அல்லது பாலர் பாடசாலையிலா?
முதலில் நாட்டை நேசிக்கும் குடிமகனை உருவாக்க வேண்டும்.அதன் பின்னர் தான் பேச்சுவார்த்தைக்கு வரமுடியும்.
காலத்தை வீணடிக்காமல் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பை நல்கும்,தொழில் செய்யும் அல்லது தொழிமுனைவோராகும் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
அதற்கு நாம் பாடசாலை, தொழிற் பயிற்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகம் ஆகிவற்றை ஒன்றிணைத்து இளைஞர்களின் சிந்தனை மாற்றத்திற்கு பங்களிப்பு நல்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
