பொலித்தீன் பைகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அறிவிப்பு
விற்பனை நிலையங்களில் இலவசமாக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு, நவம்பர் 1 முதல் பணம் செலுத்த வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு புதிய விதிமுறைகளின் ஒரு பகுதியாக, நவம்பர் 1 முதல் வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது அதற்காக பெற்றுக் கொள்ளும் பைகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.
புதிய விதிமுறைகளின் கீழ், பொலித்தீன் பை என குறிப்பிடப்படும் பொலித்தீன் பைகள் இனி இலவசமாக வழங்கப்படாது.
நுகர்வோருக்கு வலியுறுத்தல்
அதன்படி, சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கும் போது வழங்கப்படும் ஒவ்வொரு பைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களால் சூழல் மாசடைதலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான தேசிய முயற்சிக்கு பங்களிக்கவும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகள் மற்றும் கொள்கலன்களைப் பயன்படுத்துமாறு அதிகார சபை நுகர்வோரை வலியுறுத்துகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ஜனனி, சக்திக்கு எதிராக குணசேகரன் போடும் திட்டம், கதிர் செய்யப்போவது என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam