கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் விடுக்கும் விசேட அறிவித்தல்
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தற்போது மிக வேகமாக அதிகரித்துவரும் கோவிட் தொற்றினை கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது .
இவை இன்று (05) முதல் மறு அறிவித்தல் வரும் வரை அமுல்படுத்தப்படுவதோடு இத்தீர்மானங்களுக்குப் பொதுமக்கள் பரிபூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1. அனைத்து மதஸ்தலங்களும் உடனடியாக மூடப்படும் . அத்துடன் வீடுகளில் கூட்டாக நடாத்தப்படும் அனைத்து வணக்க வழிபாடுகளும் தடை செய்யப்படுகிறது .
2. அத்தியாவசிய தேவைகளுடைய பார்மஸி , குரோஸரி , மீன் மற்றும் இறைச்சிக்கடை மற்றும் மரக்கறிக்கடைகள் தவிர்ந்த அனைத்து கடைகளும் மூடப்படும் . அவ்வாறு திறக்கப்படும் கடைகள் உரிய சுகாதார நடைமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்கப்படவேண்டும் . மீறுபவர்களது கடைகளும் உடனடியாக மூடப்படும் . அத்துடன் வீடுகளில் மேற்கொள்ளப்படும் வியாபாரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளது . அத்துடன் இது கண்டறியப்பட்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .
3. வெளியூர்களுக்குச் செல்வதற்கு முற்றாகத் தடை . அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் சுகாதார வைத்திய அதிகாரியின் முன்னனுமதியினை பெற்றுச் செல்ல முடியும் .
4. அனைத்து போக்குவரத்து வாகனங்களிலும் 50 வீதமானோர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
5. அத்தியாவசிய தேவைகளுக்கான அலுவலகங்கள் தவிர மற்றைய அனைத்து அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை 50 வீதமாக மட்டுப்படுத்தப்படவேண்டும் .
6. அத்துடன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் அனைத்தையும் மிகக்கவனமாகப் பின்பற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வறிவித்தல்கள் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.