வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு
கொரிய மொழிப்பரீட்சை தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.
கொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி முறை பரீட்சை) தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்துகொள்ள பின்வரும் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு (www.slbfe.lk) பிரவேசிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
விபரங்கள்
1. பெறுபேறுகளை வழங்குதல் : 2024.09.09
2. திறன் தேர்வு (Competency Test ) மற்றும் தகுதிப் பரீட்சை (Skills Test) தொடர்பான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுதல் : 2024.09.12
3. திறன் பரீட்சைக்கான திகதிகள் மற்றம் நேரங்களை அறிந்துக் கொள்ளல்: 2024.09.25
தகுதிப் பரீட்சை மற்றும் திறன் பரீட்சை பின்வரும் திகதிகளில் இடம்பெறும்.
* திறன் பரீட்சை (Competency Test ) : 2024.09.18 முதல் 2024.09.20 வரை
* தகுதிப் பரிட்சை (Skills Test) : 2024.10.03 முதல் 2024.10.11 வரை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
