டுபாயிலிருந்து வரும் உத்தரவு : கர்ப்பிணி பெண்ணின் உதவியில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்
டுபாயில் பாரியளவிலான ஹெரோயின் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் படோவிட்ட அசங்கவின் பிரதான உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 15 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் தனது கர்ப்பிணி மனைவியை பயன்படுத்தி இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் படோவிட்ட 3 ஆம் கட்டத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சில்லறை விலையில் போதைப்பொருள் விற்பனை
டுபாய்க்கு தப்பிச்சென்ற போதைப்பொருள் கடத்தல்காரரான படோவிட்ட அசங்கவின் பிரதான உதவியாளரான சந்தேகநபர், ஹெரோயின் போதைப்பொருளை மொத்தமாக கொள்வனவு செய்து வீட்டில் பொதி செய்து ரத்மலானை, தெஹிவளை, மொரட்டுவ, கொரளவெல்ல, பொரலஸ்கமுவ, பாணந்துறை ஆகிய இடங்களில் விந்பனை செய்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிலியந்தலை ஆகிய பகுதிகளில் சில்லறை விலையில் விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு விசேட அதிரடிப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் முதித தல்படடு அவர்களின் மேற்பார்வையில் பொலிஸ் சார்ஜன்ட் (56958) பிரசன்ன, (40753) ஹெட்டியாராச்சி, பொலிஸ் கான்ஸ்டபிள்களான (86453) ஜயதிலக்க, (85009) வீரவன்ச ஆகியோரினால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
