கருணா மட்டுமல்ல அனைவருடனும் இணையத் தயார்: வியாழேந்திரன்
கிழக்கு மக்களின் ஒட்டுமொத்த இருப்பை பாதுகாப்பதற்கான பொதுவான இணக்கப்பாட்டிற்கு வருவார்களாயின் கருணா மட்டுமல்ல அனைவருடனும் இணையத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் இன்று(26.01.2024) மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சீறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் தலைமைத்துவத்திற்கு அவர் பொறுத்தமானவர்.அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
நிகழ் நிலைகாப்பு சட்டத்தில் சாதகமான விடயங்கள் உள்ளன. குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் தொடர்பாக மிக மோசமாக கருத்துக்களை சமூக ஊடகத்தினுாடாக வெளிப்படுத்துகிற நிலையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளன.
அவை வரையறை செய்யப்பட வேண்டும். ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும் என்ற நல்ல விடயங்களும் உள்வாங்கப்பட்டுள்ளது.
இதே வேளை நேர்மையாகவும், நடுநிலையாகவும் செயற்படுகின்ற ஊடக சுதந்திரமென்பது என்பது பற்றி ஆரம்பத்திலிருந்து குரல் கொடுத்துவருகின்றோம். இதன் மூலமாக ஊடகத்தினுடைய குரல்வளை நசுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்காது என தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்தி-குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா





என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
