வடக்கு மாகாணத்தில் தொடருந்து சேவை மீண்டும் மக்கள் பாவனைக்கு..
மூன்று மாதங்களின் பின்னர் வடக்கு மாகாண தொடருந்து சேவை இன்று (09.08.2026) மீண்டும் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
டிட்வா புயல் காரணமாக வடக்கிற்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சேதமடைந்த தொடருந்து பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இன்று(09) அதிகாலை கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட புகையிரதம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தை காலை 11.15 மணியளவில் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புனரமைப்பு நடவடிக்கைகள், இந்திய அரசின் 05 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பங்களிப்பில் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, இன்று காலை 5.15-க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை நோக்கியும் பிற்பகல் 1.05-க்கு காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கியும் பயணிக்கும் தொடருந்துகளில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கும் தற்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - தீபன்



பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார் News Lankasri
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri