வடக்கு மாகாணத்தில் தொடருந்து சேவை மீண்டும் மக்கள் பாவனைக்கு..
மூன்று மாதங்களின் பின்னர் வடக்கு மாகாண தொடருந்து சேவை இன்று (09.08.2026) மீண்டும் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
டிட்வா புயல் காரணமாக வடக்கிற்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சேதமடைந்த தொடருந்து பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இன்று(09) அதிகாலை கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட புகையிரதம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தை காலை 11.15 மணியளவில் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புனரமைப்பு நடவடிக்கைகள், இந்திய அரசின் 05 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பங்களிப்பில் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, இன்று காலை 5.15-க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை நோக்கியும் பிற்பகல் 1.05-க்கு காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கியும் பயணிக்கும் தொடருந்துகளில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கும் தற்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - தீபன்



ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 23 மணி நேரம் முன்
தகாத உறவில் இருந்ததாக கூறிய பத்திரிக்கையாளர்... செருப்பால் அடிப்பேன் என விளாசிய தாமரைச் செல்வி Cineulagam
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam