முள்ளிப்பொத்தானையில் சட்டத்தரணி ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு - பொலிஸார் விசாரணை
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஜாமியா நகரில் சட்டத்தரணி ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் நேற்று (08.04.2026) இடம்பெற்றுள்ளது.
காணாமல் போன மோட்டார் சைக்கிள்
பஜாஜ் டிஸ்கவர் (Bajaj Discover 135) (EP – UU 9667) என்ற இலக்கத்தையுடைய மோட்டார் சைக்கிள் வீட்டின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்திற்கு முன்னர் கடந்த ஓரிரு வாரங்களுக்குள் முள்ளிப்பொத்தானை பகுதியில் பல திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போன மோட்டார் சைக்கிள் தொடர்பாக யாருக்காவது தகவல் தெரிந்தால், உடனடியாக அறியத் தருமாறு உரிமையாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார் News Lankasri