முள்ளிப்பொத்தானையில் சட்டத்தரணி ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு - பொலிஸார் விசாரணை
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஜாமியா நகரில் சட்டத்தரணி ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் நேற்று (08.04.2026) இடம்பெற்றுள்ளது.
காணாமல் போன மோட்டார் சைக்கிள்
பஜாஜ் டிஸ்கவர் (Bajaj Discover 135) (EP – UU 9667) என்ற இலக்கத்தையுடைய மோட்டார் சைக்கிள் வீட்டின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்திற்கு முன்னர் கடந்த ஓரிரு வாரங்களுக்குள் முள்ளிப்பொத்தானை பகுதியில் பல திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போன மோட்டார் சைக்கிள் தொடர்பாக யாருக்காவது தகவல் தெரிந்தால், உடனடியாக அறியத் தருமாறு உரிமையாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri