வடக்கு மாகாண சுத்திகரிப்பு ஊழியர்கள் போராட்டம்
வடக்கு மாகாண ரீதியாக டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சம்பள உயர்வை கோரியும் நிரந்தர நியமனத்தை நடைமுறைப்படுத்துமாறும் குறித்த கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த 40 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
சுமார் ஏழு வருடங்களுக்கு மேலாக டெங்கு நோயை கட்டுப்படுத்தும் குறித்த பணியை தாம் மேற்கொண்ட போதும் தமக்கு இதுவரையும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்றும், தமக்கான ஊதியம் 22,000 வரையே கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை கொண்டு தமது வாழ்வாதாரத்தினை கொண்டு செல்ல முடியாத நிலையில், உள்ளமையினால் உரிய அதிகாரிகள் தமது ஊதியம் தொடர்பான கோரிக்கையினையும், நிரந்தர நியமனம் தொடர்பான கோரிக்கையினையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |