எந்தவொரு தரப்புடனும் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை: ரஞ்சித் மத்தும பண்டார
இனவாதமற்ற கூட்டணியாகவே ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி மலருவதோடு, எந்தவொரு தரப்புடனும் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இரகசிய உடன்படிக்கை
மேலும், "தூய்மையான அரசியல்வாதிகளே எம்முடன் இணைந்து வருகின்றனர். எதிர்காலத்திலும் மேலும் சிலர் இணையவுள்ளனர்.
பலமான, பரந்துபட்ட கூட்டணியை விரைவில் அமைத்துத் தேர்தலை எதிர்கொள்வோம்.

வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகின்றோம். எந்தவொரு தரப்புடனும் இரகசிய உடன்படிக்கை இல்லை.
அவ்வாறான இரகசிய உடன்படிக்கை தொடர்பில் எவரும் கோரிக்கை விடுக்கவும் இல்லை. எமது கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸதான்" என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri