புலிபாய்ந்தகல் திட்டம் மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்காது: டக்ளஸ் உறுதி
புலிபாய்ந்தகல் பகுதியை சுற்றாலாத்துறையாக்கும் திட்டம் கடற்றொழிலோடு இணைந்ததாக இருக்கும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுடைய
வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான திட்டங்களுக்கு இடம்கொடுக்க போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிபாய்ந்தகல் பகுதிக்கு இன்றையதினம் (28.02.2024) காலை கள விஜயம் மேற்கொண்ட பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
காணி உரிமம்
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
1983 ஆம் ஆண்டு சிறை உடைப்பை மேற்கொண்டு புலிபாய்ந்தகல் பகுதியிலே முதலில் வந்து இறங்கியிருந்தேன். அதன் பின் இன்று தான் இவ்விடத்திற்கு வந்திருக்கின்றேன்.
இப்பகுதி கடற்றொழிலாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக என்னிடம் முறையிட்டிருந்தார்கள். அவ்வாறு முறைப்பாடு கிடைத்தால் நேரில் சென்று பார்வையிடுவதுண்டு. சில நாட்கள் கடந்திருந்தாலும் இவ்விடத்திற்கு இன்று வந்திருக்கின்றேன்.
இந்த மாவட்டத்திற்கு ஆற்றல் மிகு பணிப்பாளர் ஒருவரை நியமித்திருக்கின்றேன். எந்தவித சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடம்கொடுக்க கூடாதென பணிப்புரையை எழுத்தில் அனுப்புமாறு கூறியிருக்கின்றேன்.
அத்துடன் காணி உரிமம் தொடர்பாகவும் கதைத்திருந்தார்கள். எழுத்து மூலம் அதனை கேட்டிருக்கின்றேன். அது கிடைத்த பின்பு அதனை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கரைவலைத் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் இரும்பு மித்தப்பியை இரண்டு மாதத்துக்குள் அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







