ஐ.மக்கள் சக்தியின் எவரும் அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள்:ஹர்சன ராஜகருண
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த எவரும் சர்வக்கட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற தயாரில்லை என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கம் என்பது கதை பெட்டகம்
புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு சுமார் ஒரு மாதகாலம் கடந்துள்ளது. எனினும் சர்வக்கட்சி அரசாங்கம் என்பது கதை பெட்டகம் மாத்திரமே. சர்வக்கட்சி வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் எனினும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளும் அவசியமில்லை.
சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் வேலைத்திட்டங்கள் என்ன என்பதை ஜனாதிபதி கூற வேண்டும். எதிர்க்கட்சியின் வேலைத்திட்டம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசாங்கம் இன்னும் வேலைத்திட்டத்தை முன்வைக்கவில்லை எனவும் ஹர்சன ராஜகருண கூறியுள்ளார்.