சந்திரிகா பண்டாரநாயக்கவை எவரும் தூக்கி வீச முடியாது: ரோஹன லக்ஸ்மன் பியதாஸ
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஆற்றலும் அனுபவமும் கொண்ட சிறந்த மூத்த அரசியல்வாதி. அவரை எவரும் தூக்கி வீச முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம்
சந்திரிகாவின் கட்சி உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழு நேற்று (03.11.2022) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

சந்திரிகாவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சம்பிரதாயத்துக்கு அமையவே நடவடிக்கை எடுத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தனகல்ல பகுதியில் அமைந்துள்ள ஹொரகொல்ல, பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால
சிறிசேன மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரின்
அச்சிடப்பட்ட பதாகையைத் தரையில் வீசி தேங்காய்களையும் உடைத்து கட்சி
உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 3 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri