எனது அரசியல் பயணத்தை எவறாலும் நிறுத்த முடியாது! எஸ்.பி.திஸாநாயக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கோ, பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கோ தமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவி வழங்காமை குறித்து கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது பதவி வகிக்கும் அமைச்சரவை விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டது என தாம் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
அரசியலில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் உத்தேசம் கிடையாது. எனினும், எனது அரசியல் பயணத்தை ஜனாதிபதியோ பிரதமரோ நிர்ணயிக்க முடியாது, நானேதான் எனது அரசியல் எதிர்காலம் குறித்து தீர்மானிப்பேன்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆளும் கட்சியினரே என்னை அழைத்தார்கள். எனக்கு அமைச்சு பதவி தாருங்கள் என நான் யாரிடமும் கெஞ்ச வேண்டியதில்லை.
இந்த அரசாங்கம் என்னை ஓரம் கட்டியதாக உணர்கின்றேன்.
எனக்கு அமைச்சுப் பதவி வழங்காமை குறித்து ஜனாதிபதியிடமும் பிரதமரிடமுமே கேட்க வேண்டும் என எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
