சீனாவுடன் இராணுவ ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படாது – ரணில்
சீனாவுடன் இராணுவ ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், சீனா, இலங்கையில் இராணுவ ரீதியான நகர்வுகளை முன்னெடுக்கும் என தாம் கருதவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் பற்றி பேசப்பட்டாலும் அங்கு வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மட்டுமே சீனா மேற்கொள்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு அச்சுறுத்தல்
எனினும் துறைமுகத்தின் பாதுகாப்பு கடமைகளை இலங்கை படையினரே மேற்கொண்டு வருகின்றனர் எனவும், தெற்கு கடற்படை தலைமையகத்தை ஹம்பாந்தோட்டைக்கு மாற்றும் உத்தேசம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் இலங்கையை பயன்படுத்த இடமளிக்கப்படாது என அவர் கூறியுள்ளார்.
இலங்கை ஓர் நடுநிலையான நாடு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
