பொய்யான செய்திகளுக்கு பொது மன்னிப்பு கிடையாது! நீதியமைச்சர் பகிரங்கம்
எவ்வளவுதான் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டாலும், தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவன உரிமையாளரின் சகோதரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க மாட்டார் என்று நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்று (04) பங்கேற்ற நீதி அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“தற்போதைய அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனமாக்கியுள்ளது. எனவே, சில பிரபலமான ஊடகங்கள் அரசாங்கத்தின் செயல்முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சி செய்கிறது. அது ஒரு பயனற்ற முயற்சி.
நீதித்துறை சுதந்திரம்
அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அவர் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் சிறை மருத்துவமனையில் இருந்தார். பொய்யான நோயைக் காட்டி, செல்வத்தையும் அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்தார்.

பின்னர், தற்போதைய அரசாங்கத்தின் நடைமுறைகளின்படி, தொடர்புடைய ஊடக நிறுவன உரிமையாளரின் சகோதரருக்கு எந்த நோயும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக 17 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சிறப்பு மருத்துவ குழு நியமிக்கப்பட்டது.
நீதித்துறை சுதந்திரத்தின் அடிப்படையில் முறையான மற்றும் நியாயமான தண்டனை விதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட நபரை விளக்கமறியலில் வைப்பது தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையாகும்” என கூறியுள்ளார்.
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri