மைத்திரி பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட வைபவத்தில் கூட்டமில்லை
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்ட வைபவம் ஒன்றில் மக்கள் எவரும் வருகை தரவில்லை என தெரியவருகிறது.
மைத்திரி உட்பட 10 மட்டுமே நிகழ்வில் பங்கேற்பு
புத்திசாலித்தனமான போராட்டம் அமைப்பு ஒழுங்கு செய்த நாட்டை கட்டியெழுப்பும், நெருக்கடியை தீர்க்கும் தேசிய அபிவிருத்தி திட்டம் தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று நடைபெற்றது.
இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டார். நூலில் முதல் பிரதி முன்னாள் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது.
இந்த வைபவத்தில் பலர் அமர்வதற்கான நாற்காலிகள் போட்டப்பட்டிருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட 10 பேர் மாத்திரமே வைபவத்தில் கலந்துக்கொண்டதாக தெரியவருகிறது.