நாமலுக்கு பிணை கிடைக்க வாய்ப்பில்லையாம்..! புலம்பும் ராஜபக்ச தரப்பு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியல் ரீதியாக எதிர்க்கட்சியினரை முடக்கும் செயற்பாட்டில் இந்த அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
நாமலுக்குப் பிணை இல்லையா..
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அந்தச் சட்டத்தின் கீழ் 46 பேரைக் கைது செய்து வைத்துள்ளது.

இலங்கையில் நீதித்துறைச் சுயாதீனம் மீறப்படுவது மற்றும் மனித உரிமைகள் பேரவை மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் ஏற்கனவே கவலை வெளியிட்டுள்ளன.
அரசாங்கம் தனது ஜனநாயக விரோதப் போக்கினை மாற்றிக் கொள்ளாவிட்டால், சர்வதேச அளவில் இலங்கை கடுமையான எச்சரிக்கைகளையும் சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம்! மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்
you may like this video
AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள் Cineulagam
பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி News Lankasri