கணனி சம்பந்தமான குற்றங்களில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் கைது
இலங்கையில் தங்கியிருந்து கணனி சம்பந்தமாக அதிகளவிலான குற்றங்களில் ஈடுபட்ட இரண்டு நைஜீரிய பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள், சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல், குறுஞ் செய்திகள் மூலம் இந்த குற்றங்களை செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயண விசாவில் இலங்கை வந்துள்ள இந்த நைஜீரிய பிரஜைகள் விசா அனுமதி காலம் முடிந்தும் நாட்டில் தங்கியிருந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த சந்தேகநபர்கள் சட்டவிரோதமாக கல்கிஸ்சை பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணையத்தளம் வழியாக பண பரிமாற்றங்களை செய்வதாக இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அஜித் ரோஹன பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri