தமிழர்களுக்கான மாற்றம் பொதுத் தேர்தலில் வேண்டும்: மாவீரர் போராளிகள் நலன் காப்பக அமைப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர்களுக்கான மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என மாவீரர் போராளிகள் நலன் காப்பக தலைவர் தேவராசா தீபன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று(26) இடம்பெற்ற மாவீரர் போராளிகள் நலன் காப்பம் அமைப்பின் ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பெரும்பான்மையினர் எவ்வாறு தமக்கு தேவையான மாற்றங்களை கொண்டுவருகின்றதோ அதே போல தமிழர் தேசத்திலும் பிரதிநிதிகள் மாற்றத்தை நிச்சயம் கொண்டுவர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எங்களது உள்ளக சுய உரிமையின் அடிப்படையில் நாங்கள் ஒரு அரசியல் தீர்வை முன்னெடுத்து செல்வதற்கான முயற்சிகளை இந்த மாற்றத்தின் ஊடாகவே கொண்டு செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,