அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை : செய்திகளின் தொகுப்பு
ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் வரும் ஜனவரி மாதத்தில் தென் மாகாணத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு விழாவை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் ஹரின் மற்றும் சாகல ஆகியோருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
ஜனாதிபதி ரணில் 2015ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இவ்விழாவை நடத்த முயற்சித்தார்.
ஆனால் அதனை உரிய முறையில் செய்ய முடியாததால் இம்முறை கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என அமைச்சர் ஹரினுக்கும் சாகலவுக்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
அதற்கமைய, காலி இலக்கியப் பேச்சு மற்றும் புத்தகக் கண்காட்சி, மாத்தறை கலை விழா, அஹங்கம பேஷன் நிகழ்ச்சி, கொக்கல பறை நிகழ்ச்சி போன்ற பல கலைக் கூறுகளுடன் இவ்விழா நடைபெறவுள்ளது.
ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நோக்கில் நடத்தப்படும் இவ்விழாவில் இலங்கைக்கே உரித்தான நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
