அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை : செய்திகளின் தொகுப்பு
ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் வரும் ஜனவரி மாதத்தில் தென் மாகாணத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு விழாவை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் ஹரின் மற்றும் சாகல ஆகியோருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
ஜனாதிபதி ரணில் 2015ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இவ்விழாவை நடத்த முயற்சித்தார்.
ஆனால் அதனை உரிய முறையில் செய்ய முடியாததால் இம்முறை கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என அமைச்சர் ஹரினுக்கும் சாகலவுக்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
அதற்கமைய, காலி இலக்கியப் பேச்சு மற்றும் புத்தகக் கண்காட்சி, மாத்தறை கலை விழா, அஹங்கம பேஷன் நிகழ்ச்சி, கொக்கல பறை நிகழ்ச்சி போன்ற பல கலைக் கூறுகளுடன் இவ்விழா நடைபெறவுள்ளது.
ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நோக்கில் நடத்தப்படும் இவ்விழாவில் இலங்கைக்கே உரித்தான நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri