கடந்த கால ஆட்சியாளர்களால் தான் நாடு வங்குரோத்து அடைந்தது! நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டு
கடந்த கால ஆட்சியாளர்கள் அரச நிதிகளை தங்களது நிதி போன்று பயன்படுத்தினார்கள். அதனால் இந்த நாடு வங்குரோத்து அடைந்தது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முல்லைதீவு பிரதான தபாலக கட்டடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசாங்கம் உதவிகளை செய்திருக்கின்றது. முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
தபால் துறை
தபால் துறையானது வருமானமற்ற துறையாக இருக்கின்ற போதும் அதற்கான சம்பள உயர்வுகள் மற்றும் ஏனைய இதர தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தநிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பர்களான துரைராசா ரவிகரன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், அஞ்சல் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வடமாகாண அஞ்சல் அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றிருந்தார்கள்.
மேலதிக தகவல்-சதீசன்




