புதிய சிப்பியாறு புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழா(Photos)
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிப்பியாறு புனித அந்தோனியார் ஆலயம் இன்றைய தினம் அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை குறித்த ஆலயத்தை அபிஷேகம் செய்து திறந்து வைத்தார்.
திருப்பலி ஒப்புக்கொடுப்பு
இதன்போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் மற்றும் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஆலயத்தை அபிஷேகம் செய்து திறந்து வைத்த பின் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியை தொடர்ந்து புனித அந்தோனியாரின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன்போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.








நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்தம் அமுல்! நிபந்தனையின்றி ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா News Lankasri
