நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியீட்டியுள்ளது.
டக்வர்த்த என்ட் லுயிஸ் முறையில் இலங்கை அணி 45 ஓட்டங்களினால் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 324 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
மழை குறுக்கீடு
இதில் குசல் மெண்டிஸ் 143 ஓட்டங்களையும், அவிஸ்க பெர்னாண்டோ 100 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் நியூசிலாந்து அணியின் சார்பில் ஜேகொப் டெபி 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
போட்டிக்கு மழை குறுக்கீடு செய்த காரணத்தினால் 27 ஓவர்களில் 221ஓட்டங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை பந்துவீச்சு
எனினும், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 27 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 175 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் வில் யங் 48 ஓட்டங்களையும் ரிம் ரொபின்சன் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் மதீச பத்திரண மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri