இந்திய அணியை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த தென்னாபிரிக்கா
சுற்றுலா இந்திய (India ) அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் (South Africa ) இடையில் நேற்று (10) சென் ஜோர்ஜியா பார்க்கில் இடம்பெற்ற 2வது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்க அணி, 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்கள் இழப்புக்கு 126 ஓட்டங்களை பெற்றது.
இதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சம்சன் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்தார்.
7 விக்கட்டுக்கள் இழப்பு
ஹர்திக் பாண்டியா மாத்திரமே 39 ஓட்டங்களை பெற்றார். எனினும் அதற்காக அவர் 45 பந்துகளை எதிர்கொண்டார்.
இந்தநிலையில் பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி,19 ஓவர்களில் 7 விக்கட்டுக்கள் இழப்புக்கு 128 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.
ட்ரைஸ்டன் ஸ்டீப்ஸ் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதன்படி இரண்டு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகளை கொண்ட 20க்கு20 தொடரில் இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற ரீதியில் சமநிலை வெற்றியை பெற்றுள்ளன.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 7 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
