பிரான்ஸில் விசா இன்றி தவிக்கும் தமிழர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் - அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரான்ஸில் விசா பெற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வந்த தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது..
அதற்கமைய தொழிலாளர் பற்றாக்குறையாக உள்ள துறைகளை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் உணவகம் மற்றும் ஹோட்டல் துறையும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
தொழில் வாய்ப்பு
இதன் காரணமாக பெருமளவு தமிழர்கள் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொண்டு, அதன் மூலம் விசா பெற்றுக்கொள்ள முடியும்.

உரிமையாளரின் அனுமதியுடன் சட்ட ரீதியாக விசாவை பெற்றுக்கொள்ள முடியும் என்பது சிறம்பம்சமாகும்.
சிறைத்தண்டனை
உணவகத் துறையில் சமையல்காரர்கள், பரிமாறுபவர்கள் மற்றும் சமையலறை உதவியாளர்கள் போன்ற வெற்றிடங்களை பூர்த்தி செய்ய வெளிநாட்டவர்களை இணைத்துக் கொள்ள முடியும்.

இதேவேளை பிரான்ஸ் சட்டத்திற்கு அமைய விசா இல்லாத ஒருவரை பணிக்கு அமர்த்துவது பாரிய குற்றமாகும். 30,000 யூரோ அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan