விரைவில் புதிய தமிழ்க் கூட்டணி உருவாக்கப்படும்: இராதாகிருஷ்ணன்
புதிய தமிழ்க் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியாவில், மலையக மக்கள் முன்னணி தலைமையில் நேற்று (12.02.2023) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏனைய அமைப்புக்களை ஒன்றிணைத்து புதிய தமிழ்க் கூட்டணி அமைக்கப்படவுள்ளது.
தமிழ் மக்களுடைய ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் தெரியப்படுத்துவதே அதன் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 28 நிமிடங்கள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
