விரைவில் புதிய தமிழ்க் கூட்டணி உருவாக்கப்படும்: இராதாகிருஷ்ணன்
புதிய தமிழ்க் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியாவில், மலையக மக்கள் முன்னணி தலைமையில் நேற்று (12.02.2023) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏனைய அமைப்புக்களை ஒன்றிணைத்து புதிய தமிழ்க் கூட்டணி அமைக்கப்படவுள்ளது.
தமிழ் மக்களுடைய ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் தெரியப்படுத்துவதே அதன் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri
இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் News Lankasri