தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணி
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய அரசியல் கூட்டணியை அமைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜாங்க அமைச்சர் ஜனாக வக்கும்புர மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
குறித்த அரசியல் கூட்டணியானது, செப்டம்பர் 5 ஆம் திகதி பத்தரமுல்லையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜன ஜய பெரமுன
ஜன ஜய பெரமுன என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணி, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர்களை நிறுத்துவதை நோக்கமாகக் கட்சி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய கூட்டணி எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிடக்கூடிய பரந்த கூட்டணியாக மாறும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
