ரணில் தரப்புடன் இணைய இரகசிய நகர்வை மேற்கொள்ளும் விமலின் சகா
கடுவலை நகர சபையின் முன்னாள் நகர மேயர் புத்திக ஜயவிலால் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கான இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2018ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் கடுவலை நகர சபையை மொட்டுக் கட்சி கைப்பற்றியிருந்தது.
அதன் நகராதிபதியாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர் புத்திக ஜயவிலால் நியமிக்கப்பட்டிருந்தார்.
கடுவெல தேர்தல் தொகுதி
எனினும் விமல் வீரவன்சவின் நெருங்கிய பிரமுகர்களில் ஒருவரான கடுவெல முன்னாள் மேயர் புத்திக ஜயவிலால் தற்போது தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிது காலம் அவர் அரசியல் நடவடிக்கைகளை விட்டும் ஒதுங்கி வர்த்தக நடவடிக்கைகளில் மாத்திரம் கவனம் செலுத்தியிருந்தார்.
இந்நிலையில், கடுவெல தேர்தல் தொகுதியில் விமல் வீரவன்ச அண்மையில் நடத்திய பேரணியில் கூட அவர், பங்கேற்கவில்லை என்பது அப்போது பரபரப்பாக பேசப்பட்ட விடயமாக இருந்தது.
இதற்கமைய புத்திக ஜயவிலால் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கான இரகசிய நகர்வுகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மிக விரைவில் அவரது தலைமையில் தேசிய சுதந்திர முன்னணியின் இன்னும் பலரும் ஐக்கிய தேசியக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
