புது டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே புதிய கடல்சார் முரண்பாடு
இந்தியப் பெருங்கடலில் உள்ள கோபால்ட் நிறைந்த ஃபெரோ மாங்கனீசு (Manganese) மேலோடுகளை ஆராய்வதற்கான உரிமைகளுக்காக ஜமேக்காவில் (Jamaica) உள்ள கிங்ஸ்டனைத் தளமாகக் கொண்ட சர்வதேச கடற்பரப்பு ஆணையத்திடம் இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை ஆட்சேபித்துள்ளது.
இதன் மூலம் புது டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே புதிய கடல்சார் முரண்பாடு உருவாகி வருவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியா கோபால்ட் (Cobalt)நிறைந்த ஃபெரோமாங்கனீஸ் மேலோடுகளை ஆராய விரும்பும் பகுதி, முன்னதாகவே முழுவதுமாக இலங்கையின் நீடிக்கப்பட்ட கண்ட அடுக்கு உரிமைகோரலுக்கு உட்பட்டது என்று கொழும்பு வாதிட்டு வருகிறது.
கச்சத்தீவு
இந்த பிரச்சினை தொடர்பில் அண்டை நாடுகள் இரண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இருப்பினும், கடந்த ஒன்றரை தசாப்தங்களில் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியவில்லை.

இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, கச்சத்தீவு தொடர்பான சர்ச்சையை மீண்டும் கிளப்புவதற்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) முயற்சித்து, காங்கிரஸையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கச்சத்தீவை விட்டுக்கொடுத்ததாகக் குற்றம் சாட்டியிருந்தது.
இதனை தொடர்ந்தே கோபால்ட் நிறைந்த மேலோட்டங்களை ஆய்வு செய்வது குறித்த புதிய சர்ச்சை உருவாகத் தொடங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 13 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam