இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் தொடர்பில் வெளியான தகவல்
கொழும்புக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக சந்தோஸ் ஜா நியமிக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.
சந்தோஸ் ஜா 2007-2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய பின்னரே பெல்ஜியத்துக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளதாக கூறப்படுகின்றன.
பொருளாதார கூட்டு ஒப்பந்தம்
இந்தியாவுடனான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
எனினும் அது பல காரணங்களால் நடைமுறைக்கு வரவில்லை. எனவே இந்த விடயத்தில் சந்தோஸ் ஜா மீண்டும் முக்கிய கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இரண்டாவது காரணமாக இலங்கை இந்தியாவிடம் பாரிய அளவில் கடன்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு பொருளாதார உறவுகளை வளர்ப்பதில் அவரின் பங்கு முக்கியமானதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri