புதிய அரசமைப்பு விவகாரம்: தமிழ்பேசும் கட்சிகளிடம் இந்திய உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தியுள்ள தகவல்

Colombo Sri Lanka Politician High Commission of India Colombo Election
By Rakesh Aug 05, 2026 05:40 AM GMT
Report

புதிய அரசமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும், ஓர் இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தை கடந்ததன் பின்னர், அதனை புறந்தள்ளிவிட்டு மீண்டும் தொடக்கப்புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான நகர்வு அல்ல என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தமிழ்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இதனை தெரிவித்துள்ளார்.

சசிந்திர ராஜபக்ச மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சசிந்திர ராஜபக்ச மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

 

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு அழுத்தம்

அதேவேளை, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தம் வழங்கிவரும் நிலையில், இலங்கைக்கு வருகை தரும் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதனை மீண்டும் வலியுறுத்துவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பு விவகாரம்: தமிழ்பேசும் கட்சிகளிடம் இந்திய உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தியுள்ள தகவல் | New Constitution Issue Indian High Commissioner 

தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

நேற்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முருகேசு சந்திரகுமார் ஆகியோரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம் மற்றும் நிஸாம் காரியப்பர் ஆகியோரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமீர் அலி, மொஹமட் தாஹிர் உள்ளிட்டோரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஜீவன் தொண்டமானும், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 1988 - 1989 ஆம் ஆண்டுகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எவ்வாறு கூட்டாக இணைந்து செயற்பட்டன என்பது குறித்தும், தற்போது மீண்டும் ஒரு கட்டமைப்பாக இணைந்திருப்பது குறித்தும் பிரதிநிதிகள் உயர்ஸ்தானிகரிடம் விளக்கினர்.

அநுர சஜித்துடனான சந்திப்புகள் குறித்து விளக்கம்

கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்புக்கள் மற்றும் அங்கு விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் பிரதிநிதிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.

குறிப்பாக, ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளை ஆரம்பித்தல், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், மலையக மக்களுக்கான காணிப்பகிர்வு மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்தும், அவற்றுக்கு ஜனாதிபதி அளித்த பதில்கள் குறித்தும் உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்திய உயர்ஸ்தானிகரின் நிலைப்பாடு

பிரதிநிதிகளின் கருத்துக்களைச் செவிமடுத்த உயர்ஸ்தானிகர், மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவது உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் இந்தியா ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு அழுத்தம் வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பு விவகாரம்: தமிழ்பேசும் கட்சிகளிடம் இந்திய உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தியுள்ள தகவல் | New Constitution Issue Indian High Commissioner 

மேலும், நாட்டுக்கு வருகைதரும் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது அதனை மீண்டும் வலியுறுத்துவார் எனவும் உறுதியளித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பான பிரச்சினை கரிசனைக்குரியது என்பதை ஏற்றுக்கொண்ட அவர், மலையகத்தில் 'டித்வா' சூறாவளி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காணி வழங்கல் குறித்தும் விசாரித்தறிந்தார்.

புதிய அரசமைப்பு விவகாரம்

புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்துக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், "தற்போது நடைமுறையில் உள்ள அரசமைப்பை கைவிட்டு, மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து முழுமையாக ஆரம்பிக்கப் போகின்றீர்களா?" எனப் பிரதிநிதிகளிடம் வினவினார்.

அதற்குப் பதிலளித்த பிரதிநிதிகள், மாகாண சபைகள் முறைமை உள்ளிட்ட சில கூறுகள் மூலம் அதிகாரப் பகிர்வுக்கான கட்டமைப்பு ஏற்கனவே உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், அதனை முற்றாக அழித்துவிட்டு மீண்டும் தொடங்குவது ஆபத்தான விடயம் எனச் சுட்டிக்காட்டினர்.

புதிய அரசமைப்பு எனும் போது தற்போது இருப்பதை விடவும் கூடுதலான அதிகாரப் பகிர்வு பற்றியே தாம் பேசுவதாகவும் குறிப்பிட்டனர்.

இதற்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர், இந்த விடயத்தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும், ஓர் இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தைக் கடந்ததன் பின்னர் அதனைப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் தொடக்கப் புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான நகர்வு அல்ல என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

EPF சட்டத்தில் புதிய மாற்றங்கள் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

EPF சட்டத்தில் புதிய மாற்றங்கள் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

 

கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்ய வெளிநாடொன்றில் விசேட நடவடிக்கை!

கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்ய வெளிநாடொன்றில் விசேட நடவடிக்கை!

 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US