அடுத்தவாரம் புதிய அமைச்சரவை - வெளியாகியுள்ள தகவல்
புதிய அமைச்சரவை நியமனம் அடுத்த வாரம் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய போதிலும், அரசாங்கத்தின் எந்தவொரு செயற்பாடுகளையும் நிறுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச அமைச்சர்கள் தற்போது அமைச்சுக்களில் கடமையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்த போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தம்மைத் தவிர்த்ததாகவும், ஆனால் பாராளுமன்றத்தில் தங்கியிருந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பொதுமக்கள் பார்த்ததாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
அரசியலமைப்பை மீறியதற்காக 2018 இல் நீதிமன்றத்திற்குச் சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அநியாயமாக இப்போது தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை அரசியலமைப்பின் பிரகாரம் ராஜினாமா செய்ய நிர்ப்பந்திப்பதாகவும் அவர் கூறினார்.
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri