தீவிரமடையும் கோவிட் பரவல் - முழு ஊரடங்கை அறிவித்த அண்டை நாடு
இந்தியாவில் கோவிட் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உலகின் சில நாடுகளில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில்,இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திலும் தற்போது கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, திங்கட்கிழமை (28 ஆம் திகதி) முதல் ஏழு நாட்களுக்கு வங்கதேச அரசு, முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
அனைத்து விதமான பயணங்களுக்கும் திங்கட்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறை தொடர்பான வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அவசரமற்ற விடயங்களுக்காக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு வரை 15 சதவீதமாக இருந்த தினசரி கோவிட் பாதிப்பு விகிதம், தற்போது 21.22 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கோவிட் பாதிப்பு அதிகரித்து வருவது, வங்கதேசத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தலாம் என அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்திருந்த நிலையில், இந்த முழு ஊரடங்கு அமுலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan