இந்திய - இலங்கை கடற்படையினருக்கு இடையில் பேச்சுவார்த்தை
இந்திய இலங்கை உயர் கடற்படை அதிகாரிகளுக்கு இடையில் நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.
31ம் கடல்சார் எல்லைகள் குறித்த சர்வதேச மாநாடு இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்றுள்ளது. இரு தரப்பு கடற்படையினரும் எதிர்நோக்கி வரும் சவால்களை எவ்வாறு வெற்றிகொள்வது என்பது குறித்து இன்றைய பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை பிரதிநிதிகளுக்கு வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரால் பிரியந்த பெரேரா தலைமை தாங்கியதுடன், இந்திய கடற்படை பிரதிநிதிகளுக்கு ரியர் அட்மிரால் புனீத் சாடா தலைமை தாங்கினார்.
கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், இலங்கை இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் போன்ற விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பது குறித்து இலங்கை கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு எல்லைப் பாதுகாப்பு பணிகளை இரு தரப்புக்களும் அதிகரிப்பதற்கு இணக்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 15 மணி நேரம் முன்

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
