இந்தியாவிலிருந்து நெருக்கடிக்கு மத்தியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊசிகள்
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 800,000 சிரிஞ் என்ற அகற்றக்கூடிய ஊசிகள், உத்தர பிரதேசத்தில் இருந்து இந்திராகாந்தி சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, போக்குவரத்து இடையூறுக்கு மத்தியிலும், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு புதுடில்லிக்கான பாதை போக்குவரத்து மூடப்பட்டதால், இலங்கைக்கு வழங்குவதற்காக சிரிஞ்ச்கள் என்ற ஊசிகளை வானூர்தி நிலையத்திற்கு கொண்டு செல்லும் வாகனம், எல்லையில் நிறுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுடெல்லி உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்படுவதன் காரணமாகவே இது மேற்கொள்ளப்பட்டது.
எனினும், புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகம், இந்திய வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு, டெல்லி வானூர்தி நிலையத்திற்கு, குறித்த ஊசிகளின் தொகையை எடுத்துச் செல்ல உதவுமாறு கோரியுள்ளது.
உடனடியாக செயற்பட்ட இந்திய வெளியுறவு அமைச்சு, டெல்லி காவல்துறை தலைமையகம் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுக்கு இதற்கான உத்தரவுகளை பிறப்பித்து, ஆகஸ்ட் 14 ஆம் திகதி குறித்த ஊசிகளை இலங்கைக்கு அனுப்ப உதவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri