சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் : பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு நாவலடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 21 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
எனினும், குறித்த இளைஞனின் மரணம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் நாவலடி பொது மக்களால் நேற்று (29.01.2024) காத்தான்குடி பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே தனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த நபரின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பொய்யான முறைப்பாடு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இரண்டு கணவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த பெண் சுமார் 8 மாத காலமாக உயிரிழந்த நபருடனும் மற்றைய கணவரோடும் வாழ்ந்து வந்ததாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்து சம்பவம் கிராம மக்களுக்கு தெரியவந்ததையடுத்து நாவலடி கிராம மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து குறித்த பெண்ணையும் அவரது கணவரையும் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், பெண்ணின் நடவடிக்கை கிராமத்துக்கு அவ பெயர் வரும் என்ற காரணத்தினால் பெண்ணையும் கணவரையும் அக்கிராமத்தில் இருந்து வெளியேற்றுமாறும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பெண் பொலிஸாரிடம் பொய்யான முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்து அப்பகுதியில் உள்ள இளைஞர்களை கைது செய்யுமாறு கோரியுள்ளார்.
இதற்கு பொலிஸாரும் உடந்தையாக இருந்து தங்களது முறைப்பாட்டை கூட பதிவு செய்யவில்லை எனவும் கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நீதியான விசாரணை
எனினும், அவ்விடத்திற்கு வருகை தந்த மரணமடைந்த நபரின் தாயார் தனது மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மகனுக்கான நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சுமார் மூன்று மணி நேரங்களுக்கு மேலாக பொலிஸ் நிலையத்தில் காத்திருந்த கிராம மக்கள் கிராமம் சார்பாக முறைப்பாடு ஒன்றினை எழுதி கையொப்பமிட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் கையளித்து அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக இன்று காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

எனினும், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டாரா தற்கொலை செய்தாரா என்ற பாரிய சந்தேகங்களும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri