சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் : பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

Sri Lanka Police Batticaloa Sri Lanka
By P.Sasikaran Jan 30, 2024 05:10 AM GMT
Report

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு நாவலடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 21 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

எனினும், குறித்த இளைஞனின் மரணம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் நாவலடி பொது மக்களால் நேற்று (29.01.2024) காத்தான்குடி பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த நபரின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது

ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது

பொய்யான முறைப்பாடு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இரண்டு கணவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த பெண் சுமார் 8 மாத காலமாக உயிரிழந்த நபருடனும் மற்றைய கணவரோடும் வாழ்ந்து வந்ததாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.


குறித்து சம்பவம் கிராம மக்களுக்கு தெரியவந்ததையடுத்து நாவலடி கிராம மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து குறித்த பெண்ணையும் அவரது கணவரையும் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், பெண்ணின் நடவடிக்கை கிராமத்துக்கு அவ பெயர் வரும் என்ற காரணத்தினால் பெண்ணையும் கணவரையும் அக்கிராமத்தில் இருந்து வெளியேற்றுமாறும் கூறியுள்ளனர்.

பெண்களின் இரவு நேர பணி குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

பெண்களின் இரவு நேர பணி குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இந்நிலையில், குறித்த பெண் பொலிஸாரிடம் பொய்யான முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்து அப்பகுதியில் உள்ள இளைஞர்களை கைது செய்யுமாறு கோரியுள்ளார்.

இதற்கு பொலிஸாரும் உடந்தையாக இருந்து தங்களது முறைப்பாட்டை கூட பதிவு செய்யவில்லை எனவும் கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.


நீதியான விசாரணை 

எனினும், அவ்விடத்திற்கு வருகை தந்த மரணமடைந்த நபரின் தாயார் தனது மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மகனுக்கான நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சுமார் மூன்று மணி நேரங்களுக்கு மேலாக பொலிஸ் நிலையத்தில் காத்திருந்த கிராம மக்கள் கிராமம் சார்பாக முறைப்பாடு ஒன்றினை எழுதி கையொப்பமிட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் கையளித்து அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக இன்று காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் : பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் | Nawaladi Civilians Besieged The Police Station

எனினும், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டாரா தற்கொலை செய்தாரா என்ற பாரிய சந்தேகங்களும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

18 சதம் நிலுவைத் தொகைக்காக மின்சாரம் துண்டிப்பு

18 சதம் நிலுவைத் தொகைக்காக மின்சாரம் துண்டிப்பு

மரக்கறி விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

மரக்கறி விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US