போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை படம்பிடித்த கடற்படை வீரர்
போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்களை அச்சுறுத்தும் விதத்தில் கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மாதகல் - குசுமாந்துறையில் உள்ள தனியார் இருவருக்கு சொந்தமான காணியை கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கிருந்த கடற்படை வீரர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை படம்பிடித்து அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டுள்ளார்.
இதேவேளை அங்கிருந்த புலனாய்வாளர் ஒருவர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது கை காட்டி மிரட்டி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
போராட்டத்தின்போது ஆயுதம் தாங்கிய கடற்படையினர் போராட்டக்களத்தில் வரிசையாக நின்றனர்.
மக்களது ஜனநாயக முறையிலான போராட்டத்தை ஒடுக்கும் விதமாக இவ்வாறு செயற்படுவது, அரசின் அராஜக போக்கினை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நேற்றும் கடற்படை வீரர் ஒருவர் மாதகலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களை மிரட்டும் விதத்தில் படம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி.......
யாழில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி முறியடிப்பு (PHOTOS)

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 14 மணி நேரம் முன்

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதை அழுத்தமாக கூறுகிறோம்! பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022