மன்னாரில் கடற்படை கொத்தணி! - 248 பேருக்குத் தொற்று உறுதி
யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 248 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் மன்னார் கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 291 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்கள் அனைவரும் 18 தொடக்கம் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மன்னார் கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் பயிற்சி நிலை கடற்படையினராக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
