தேசிய சுற்றுச்சூழல் வாரம் அனுஸ்டிப்பு
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உலக சுற்றுச்சூழல் தின தேசிய கொண்டாட்டத்துடன் இணைந்து தேசிய சுற்றுச்சூழல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுற்றுச்சூழல் வாரம் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 05 ஆம் திகதி வரை தொடர் நிகழ்ச்சிகளை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
அந்த வகையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலையில் அமைந்துள்ள திஸ்ஸ மகா வித்தியாலயத்திலும் பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்திலும் நேற்று (03) மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது.
காலநிலை மாற்றம், உயிர்ப்பல்வகைமை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு விடயங்கள் இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி முகாமையாளரால் தெளிவூட்டப்பட்டன.
சுத்தம் செய்யும் நிகழ்வு
இதேவேளை தேசிய சுற்றுச்சூழல் வாரத்துடன் இணைந்து, தூய்மை இலங்கை( Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் திருகோணமலை நகரம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று (04) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், கிழக்கு மாகாண சபையின் நிறுவனத் தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி News Lankasri
