பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சிக்கிய நபர் - வெளியான பகீர் தகவல்
பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் பாணந்துறை-ஹொரேத்துடுவ பாலத்திற்கு அருகில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் ஒருவரை சோதனை செய்தபோது, அவரது சட்டைப் பையில் பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, அதற்கான 3 தோட்டாக்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
பேனா துப்பாக்கி
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த துப்பாக்கி, வேலை செய்யும் நிலையில் உள்ளதெனவும், கொலைக்கு மிகவும் இலகுவாக பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் நான்கரை அங்குல நீளம் கொண்ட இந்த துப்பாக்கி, ஒரு நபரைக் கொல்ல எந்த நேரத்திலும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பிரிவு
சந்தேக நபர் இந்த துப்பாக்கியை ஏன் வைத்திருந்தார் என்பது குறித்து களுத்துறை குற்றப்பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

சந்தேக நபர் மொரட்டுவ - மோல்பே பகுதியை சேர்ந்த 43 வயதுடையவராகும். அவர் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 1 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam